hindu-god-yantra-engraver.
Tuesday 14 August 2018
Wednesday 14 February 2018
Sunday 4 February 2018
திரு மாணிக்க வாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருச்சதகம் மெய் உணர்தல் பக்தி வைராக்ய விசித்திரம்
திரு மாணிக்க வாசகர்
திருப்பெருந்துறையில் அருளிய
திருச்சதகம் மெய் உணர்தல்
பக்தி வைராக்ய விசித்திரம்
பாடல் : 89
பணிவார் பிணிதீர்த்து அருளிப்
பழைய அடியார்க்கு உன்
அணியார் பாதம் கொடித்தி
அதுவும் அரிதென்றால்
திணிஆர் மூங்கில் அனையேன்
வினையைப் பொடியாக்கித்
தணிஆர் பாதம் வந்து ஒல்லை தாராய்
பொய்தீர் மெய்யனே .
பொருள் :
இந்த உலக வாழ்க்கை என்னும் பொய்ப்பற்றை ஒழிக்கின்ற மெய்ப்போருளானவரே, தங்களை வழிபடும் பழைய அடியார்களின் பிறவிப் பிணி என்னும் நோய் தீர்த்து அருளி, தங்களின் அழகுமிக்க திருவடிகளை தந்தருள்வீர்கள், எனக்கு அவர்களைப் போல் கடினமாக செய்ய இயலாது , மூங்கிளைப்போல் உறுதியான என்னுடைய வினையை நாசமாக்கி அதன்பிறகாவது தங்களுடைய குளிர்ந்த அருட்பாதங்களை விரைவாக நீங்களே வலிய வந்து தந்தருளுங்களேன் ஐயனே.
Subscribe to:
Posts (Atom)