Sunday 4 February 2018

திரு மாணிக்க வாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருச்சதகம் மெய் உணர்தல் பக்தி வைராக்ய விசித்திரம்

திரு மாணிக்க வாசகர்
திருப்பெருந்துறையில் அருளிய
திருச்சதகம்  மெய் உணர்தல்
பக்தி வைராக்ய விசித்திரம்

  பாடல் :  89

பணிவார் பிணிதீர்த்து அருளிப்
       பழைய அடியார்க்கு உன்   
அணியார் பாதம் கொடித்தி
      அதுவும் அரிதென்றால்
திணிஆர் மூங்கில் அனையேன்
      வினையைப் பொடியாக்கித்
தணிஆர் பாதம் வந்து ஒல்லை தாராய்
      பொய்தீர் மெய்யனே .

பொருள் :

இந்த உலக வாழ்க்கை என்னும் பொய்ப்பற்றை ஒழிக்கின்ற மெய்ப்போருளானவரே, தங்களை வழிபடும் பழைய அடியார்களின்  பிறவிப் பிணி என்னும் நோய் தீர்த்து அருளி, தங்களின் அழகுமிக்க திருவடிகளை தந்தருள்வீர்கள், எனக்கு அவர்களைப் போல் கடினமாக செய்ய இயலாது ,  மூங்கிளைப்போல் உறுதியான என்னுடைய வினையை நாசமாக்கி அதன்பிறகாவது தங்களுடைய குளிர்ந்த அருட்பாதங்களை விரைவாக நீங்களே வலிய வந்து தந்தருளுங்களேன் ஐயனே.